அரசாங்க தொழில் தான் தேவை என்று படித்தவர்கள் அடம்பிடிப்பதனால் தான் இலங்கையில் வேலையில்லாத் திண்டாட்டம் இவ்வளவு தூரம் தலைவிரித்தாடுவதற்கு காரணம் என கைத்தொழில் வர்த்தத்துறை அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
சிறியளவிலான உணவு உற்பத்தி முயற்சிகளுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு அமைச்சின் கேற்போர் கூடத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்துகொண்டார்.